க.பரமத்தி, பிப்.12: க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி உப்புபாளையத்தில் சக்தி வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது. நேற்று தை அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் சுற்று பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டன. இதேபோல் குப்பம் பெரியகாண்டியம்மன், குப்பம் பொன்காளியம்மன், சூடாமணி மாசாணியம்மன், அத்திப்பாளையம் பெரியபொன்னாச்சியம்மன், ஆகிய கோயில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டது.